Saturday, May 22, 2010

நியூட்டன் பார்க்க தவறிய இலை(Newton failed to see falling leaf)

விடிந்தும் விடியாத காலை நேரம், கீச் கீச் கா கா கூகூ எல்லாம் கலந்த கூச்சல் என்னை எழுப்பியது. குளிர்ந்த காற்று முகத்தில் பட ஏதோ ஒரு ஆனந்தம். புதிய நாளை அனுபவிக்க, மனமெல்லாம் ஒரு சந்தோஷ அருவி.
எழுந்து நடந்தேன், தூய்மையான காற்று நுரையீரல் நிறைத்தது. சிகப்பு நிற சூரிய ஒளி சுடாமல் சுகமாய் தொட்டது.
இந்த இயற்கை ஒரு அறிவு புதையல் என மனதில் தோன்றியது. சூரியனின் ஒளி நிறம் மாறுவதில்லை, நம்மை அடையும் ஒளி யின் அலை நீளத்தை பொறுத்து நாம் தான் அதை மாற்றி உணர்கிறோம்.
பறவைகள் வீடு கட்ட இலவச இடம் கொடுத்த மரத்தில் இருந்து பழுப்பு இலைகள் அழகாய் ஆடி ஆடி மெதுவாக பூமி நோக்கி வந்தன.
நியூட்டன் ஆப்பிளுக்கு பதிலாக இலையை பார்த்திருந்தால்?,
புவியீர்ப்பு விசையோடு, காற்றின் எதிர்விசை(air resistance) பற்றியும் அறிந்திருப்பார்.
அரிஸ்டாட்டில்(Aristotle), பூமி நோக்கி வரும் பொருளின் முடுக்கம்(acceleration) அதன் நிறையை(mass) பொறுத்து மாறும் என தவறாக சொல்லி இருக்கமாட்டார்.
கலிலியோவுக்கு(Galileo) காற்றின் எதிர்விசை (air resistance) பற்றி அறியும் தேவை இருந்திருக்காது.
கனமான ஆப்பிள் பழத்தை பார்த்ததால் நுணுக்கமான விஷயங்களை பார்க்க தவறிவிட்டார் நியூட்டன்
கனமான கனவுகள், கனமான நினைவுகள், கனமான எதிர்பார்ப்புகளில் வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்கள் நமக்கு புலப்படாமல் போவதை அறிந்தேன்.

Note:Acceleration due to gravity is constant irrespective of mass of the falling body. The difference experienced between a leaf and a fruit is due to the air's resistance.

Sunday, May 9, 2010

அத்திக்காய் காய் காய் (athikaai kaai kaai superb lyrics)

very old song but lyrics are ageless.This song is said to be inspired by kaalamegam's thani paadal thirattu. Not able to find tamil lyrics in tamil!!. so translated to tamil. Download and hear this song, hope this song will touch hearts even after several decades. Find the song that inspired kannadhasan to write this song at the end of the lyrics


அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ
நீ என்னை போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
கோதையெனை காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ


The song that inspired kannadhasan to write this love song

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காய்ந்து உனக்கு என்ன பயன்-பற்றில்லா
அவரைக்காய் கோவைக்காய் அவதியுரும் பாவைக்காய்
அங்குமிங்கும் தூதுவிளங்காய்...............not able to know further..

Many songs of our present day poets including kannadhasan, vairamuthu are taken from old poems

Saturday, May 1, 2010

கண்ணில் தாகம் தீருமோ(kannil dhagam theerumo)

பாடல் வரிகள்: ஆண்டாள் பிரியதர்ஷினி
பாடியவர்: சௌமியா
இசையமைப்பு :கார்த்திக்ராஜா

காதல் ஏக்கம் பயம் என பல உணர்வுகளை சுமக்கும் பாடல் இது
ஏனோ நெஞ்சம் தொட்டது இந்த பாடல்


http://www.youtube.com/watch?v=zCOowtelmI4

கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா

கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா


கோபங்கள் பேசும்போது
வேதனை கூடும்
பிரேமைகள் பேசும் போது
மோகம் கூடும்
மௌனம் தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா

கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா

வீட்டின் தனிமையிலே
தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால்
முத்தம் பல பறிப்பவனே
சோலை பூவெல்லாம்
ஆடையாய் சூடி பார்ப்பவன்
மாமலை நேரங்கள்
ஈரமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
மனம் கலைந்து சிரித்திட

கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா

வீட்டின் தனிமையிலே
ஏதோ ஒரு பெருநெருப்பு
பூவின் அசைவினிலே
ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும் வார்த்தைகள்
காற்றிலே தேய்ந்து போகுதே
சினேகம் வேறில்லை
புன்னகை நெஞ்சம் வேண்டுதே
கண்கள் மீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியல் இனித்திட

நெஞ்சில் அச்சம் பொங்குதே
ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே
ஏனோ ஏனோ