பாடல் வரிகள்: ஆண்டாள் பிரியதர்ஷினி
பாடியவர்: சௌமியா
இசையமைப்பு :கார்த்திக்ராஜா
காதல் ஏக்கம் பயம் என பல உணர்வுகளை சுமக்கும் பாடல் இது
ஏனோ நெஞ்சம் தொட்டது இந்த பாடல்
http://www.youtube.com/watch?v=zCOowtelmI4
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
கோபங்கள் பேசும்போது
வேதனை கூடும்
பிரேமைகள் பேசும் போது
மோகம் கூடும்
மௌனம் தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால்
முத்தம் பல பறிப்பவனே
சோலை பூவெல்லாம்
ஆடையாய் சூடி பார்ப்பவன்
மாமலை நேரங்கள்
ஈரமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
மனம் கலைந்து சிரித்திட
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
ஏதோ ஒரு பெருநெருப்பு
பூவின் அசைவினிலே
ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும் வார்த்தைகள்
காற்றிலே தேய்ந்து போகுதே
சினேகம் வேறில்லை
புன்னகை நெஞ்சம் வேண்டுதே
கண்கள் மீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியல் இனித்திட
நெஞ்சில் அச்சம் பொங்குதே
ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே
ஏனோ ஏனோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment