விடிந்தும் விடியாத காலை நேரம், கீச் கீச் கா கா கூகூ எல்லாம் கலந்த கூச்சல் என்னை எழுப்பியது. குளிர்ந்த காற்று முகத்தில் பட ஏதோ ஒரு ஆனந்தம். புதிய நாளை அனுபவிக்க, மனமெல்லாம் ஒரு சந்தோஷ அருவி.
எழுந்து நடந்தேன், தூய்மையான காற்று நுரையீரல் நிறைத்தது. சிகப்பு நிற சூரிய ஒளி சுடாமல் சுகமாய் தொட்டது.
இந்த இயற்கை ஒரு அறிவு புதையல் என மனதில் தோன்றியது. சூரியனின் ஒளி நிறம் மாறுவதில்லை, நம்மை அடையும் ஒளி யின் அலை நீளத்தை பொறுத்து நாம் தான் அதை மாற்றி உணர்கிறோம்.
பறவைகள் வீடு கட்ட இலவச இடம் கொடுத்த மரத்தில் இருந்து பழுப்பு இலைகள் அழகாய் ஆடி ஆடி மெதுவாக பூமி நோக்கி வந்தன.
நியூட்டன் ஆப்பிளுக்கு பதிலாக இலையை பார்த்திருந்தால்?,
புவியீர்ப்பு விசையோடு, காற்றின் எதிர்விசை(air resistance) பற்றியும் அறிந்திருப்பார்.
அரிஸ்டாட்டில்(Aristotle), பூமி நோக்கி வரும் பொருளின் முடுக்கம்(acceleration) அதன் நிறையை(mass) பொறுத்து மாறும் என தவறாக சொல்லி இருக்கமாட்டார்.
கலிலியோவுக்கு(Galileo) காற்றின் எதிர்விசை (air resistance) பற்றி அறியும் தேவை இருந்திருக்காது.
கனமான ஆப்பிள் பழத்தை பார்த்ததால் நுணுக்கமான விஷயங்களை பார்க்க தவறிவிட்டார் நியூட்டன்
கனமான கனவுகள், கனமான நினைவுகள், கனமான எதிர்பார்ப்புகளில் வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்கள் நமக்கு புலப்படாமல் போவதை அறிந்தேன்.
Note:Acceleration due to gravity is constant irrespective of mass of the falling body. The difference experienced between a leaf and a fruit is due to the air's resistance.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
imm...good one.
Post a Comment