Monday, March 15, 2010

கனவு காதல்

மாசறு பொன்னே என்றால்
உனை அணியாமல் போய்விடுவேன்
வாசனை மலரே என்றால்
மாலையில் வாடிவிடுவாய்

ஜீவநதி என்றால்
உப்பு கடல் தொட்டு கலந்திடுவாய்
என்னுயிர் என்றால்
என்றாவது பிரிந்துவிடுவாய்

என்னவள் என்பதை விட
என்ன நான் சொல்லுவேன்

காதல் மயக்கத்தில்
காலம் மறந்திட்டேன்
பொழுது புலர்ந்தது
கனவு தெளிந்தது

இமை திறந்ததும்
கனவின்
சுவையும் இல்லை
சுமையும் இல்லை

நாளைய தூக்கத்தில்
சொல்லாமல் வந்துவிடு
கவிதை என சொல்லி
கிறுக்கல்கள் செய்திட
காரணம் வேண்டும்.

No comments: