மாசறு பொன்னே என்றால்
உனை அணியாமல் போய்விடுவேன்
வாசனை மலரே என்றால்
மாலையில் வாடிவிடுவாய்
ஜீவநதி என்றால்
உப்பு கடல் தொட்டு கலந்திடுவாய்
என்னுயிர் என்றால்
என்றாவது பிரிந்துவிடுவாய்
என்னவள் என்பதை விட
என்ன நான் சொல்லுவேன்
காதல் மயக்கத்தில்
காலம் மறந்திட்டேன்
பொழுது புலர்ந்தது
கனவு தெளிந்தது
இமை திறந்ததும்
கனவின்
சுவையும் இல்லை
சுமையும் இல்லை
நாளைய தூக்கத்தில்
சொல்லாமல் வந்துவிடு
கவிதை என சொல்லி
கிறுக்கல்கள் செய்திட
காரணம் வேண்டும்.
No comments:
Post a Comment