Sunday, March 21, 2010

காதலின் காத்திருப்பு

மணம் இல்லா மலரோடு
மனம் செல்வதில்லை.
மனம் தொடா இசையை- என்
உயிர் சுகிப்பதில்லை

உனை தொடா காற்று
மண் தொட்டு வந்தாலும்
மலர் தொட்டு வந்தாலும்
வாசனை சுமக்கவில்லை

காற்றுக்குமா நீ தடை விதித்தாய்!!!
எந்த கூற்றுக்கு நீ இசைவாய்?

வாணும் வண்ண நிலவும் –உன்
காலடியில் தருவேன்- என
பொய்யுரைக்க மாட்டேன்

தேனும் தெள்ளிய பாலும் –
உன் மொழியென -திகட்டும்
சொல்லுரைக்க மாட்டேன்

வாழும் வரை
காதல் சுமந்து காத்திருப்பேன்

அதன் பின்னே
மண்ணோடு மனம் கலந்த பின்னும்

உன் காலடி தடம் பட காத்திருப்பேன்

No comments: