மணம் இல்லா மலரோடு
மனம் செல்வதில்லை.
மனம் தொடா இசையை- என்
உயிர் சுகிப்பதில்லை
உனை தொடா காற்று
மண் தொட்டு வந்தாலும்
மலர் தொட்டு வந்தாலும்
வாசனை சுமக்கவில்லை
காற்றுக்குமா நீ தடை விதித்தாய்!!!
எந்த கூற்றுக்கு நீ இசைவாய்?
வாணும் வண்ண நிலவும் –உன்
காலடியில் தருவேன்- என
பொய்யுரைக்க மாட்டேன்
தேனும் தெள்ளிய பாலும் –
உன் மொழியென -திகட்டும்
சொல்லுரைக்க மாட்டேன்
வாழும் வரை
காதல் சுமந்து காத்திருப்பேன்
அதன் பின்னே
மண்ணோடு மனம் கலந்த பின்னும்
உன் காலடி தடம் பட காத்திருப்பேன்
No comments:
Post a Comment